Thursday, October 27, 2011

நானறிவேன்...


நானறியேன்
நாளும் நாடகமாடி
நல்லுறவை கரைக்கும்
நயவஞ்சக கூட்டத்தை...


புன்னகை பூப்பூத்து
புதுஉறவை ஆரம்பித்து
வஞ்சகம் ஒளித்திட்டு
வாழ்பவர் யாரென நானறியேன்...

கைரைகை அழிய கைகுலுக்கி
கைகளில் கத்தியேந்தி
கால்களை இடற செய்பவரை
கடுகளவும் யாரென நானறியேன்

முகத்துக்கு முன் புகழாரம்
முகத்திற்கு பின் அவதூறு
ஆயிரம் நாக்குடைய மனிதர்கள்
அவர்கள் யாரையும் நானறியேன்...

பகைவர் யாரென தெரிந்தாலும்
பக்கத்தில் இருந்தே பகைதீயோடு
உதட்டில் இனிப்போடு உறவாடிய
உள்ளங்களை யாரென நானறியேன்....

ஆயிரம் பகைத்தீ மூண்டாலும்
அத்தனையும் மறைமுகமாய் வந்தாலும்
அணுவளவும் கலங்குவதில்லை
அதை எதிர்ப்பதை நானறிவேன்...

No comments:

Post a Comment