Monday, November 11, 2013

சந்தி பிழைகள்

வெள்ளை வானம் எங்கும்
கருமையாய் வெறுமையாய்
வெளிர்முகங்கள் மங்கலாய்
பசும்நிலங்கள் வெடிப்புகளாய்...

பூக்களில்லாத பூஞ்சோலைகள்
நிலவு சிரிக்காத நீலவானம்
கூவாது பறந்திடும் குயில்கள்
மெளனம் காட்டும் மழலைகள்...

நகரா நிமிட நரகங்கள்
நஞ்சாய் போனது அமிழ்தும்
ஊமையாய் போன அலைகள்
ஊர் போய் சேராத வழிகள்...

அடக்கி வைத்த கவிதைகள்
அடங்காமல் திரியும் நினைவுகள்
காற்றாய் போன உருவங்கள்
காலமாகி போன காலங்கள்..

சற்றேரக்குறைய அப்படித்தானோ
வழிந்தோடி வீணாகி வெறுமையாகி
அதுவாகவும் இதுவாகவும் இல்லாமல்
அர்த்தமுமில்லாமல் முற்று புள்ளியுடன்...

No comments:

Post a Comment