Thursday, October 27, 2011

எழுதாத கவிதைகள்.....




எழுதி வைத்த கவிதைகள்
அனாதை குழந்தை போல
பரணில் அடைந்து கிடக்கிறது...
எழுதி திருப்தி இல்லாத
கவிதைகள் மூலையி்ல் சேர்த்து
குளிர் காய பயன்படுகிறது...
எழுதாத கவிதைகள் எழுத
மனம் தனிமை காட்டில்
அலைந்து திரிகின்றது...
எழுதிய ஒரு கவிதையாவது
என்றாகிலும் படிக்கப்பட்டு சாபம்
தீராதாவென ஏங்கி தவிக்கின்றது...

No comments:

Post a Comment