Thursday, October 27, 2011


தேக்கி வைத்த வார்த்தைகள்
எல்லாம் தீபாவளிக்கு பட்டாசு
கேட்டு அழும் சிறுவனாய்
தேம்பி அழுகிறது...

அர்த்தம் இழந்த வார்த்தைகள்
எல்லாம் பெற்றோரால் கைவிடப்பட்ட
அனாதை குழந்தைகளாய்
அலைந்து திரிகிறது...

இதயம் கொட்டி வடித்த
வார்த்தைகள் எல்லாம்
செவித்திறனற்றவன் காதில் சொன்ன
கவிதையாய் உதாசினப்படுகிறது...

பார்த்து பார்த்து செதுக்கிய
வார்த்தைகள் எல்லாம்
துடைப்பம் கொண்டு பெருக்கி
தள்ளப்பட்ட குப்பையாய் சிரிக்கிறது...

அழகாய் சி்ரித்த வார்த்தைகளும்
அரசியல் தலைவரின் சிலை
போல ஆயிரம் பேர் போனாலும்
கேட்பாரற்று கிடக்கிறது...

இறந்தகாலத்தின் இனிய வார்த்தைகள்
நிகழ்கால மாற்றத்தில் சுவை
இழந்து கரும்பு சக்கையாய்
காட்சி அளிக்கிறது...

ஆங்காங்கே அழுது சிதறிக்கிடக்கும்
அத்தனை வார்த்தைகளையும்
பொறுக்கி எடுத்தேன் இதயத்தின்
ஆடியாழத்தில் எரித்து புதைத்தேன்...

No comments:

Post a Comment