பற்ற வைத்ததும் ஒளிர்கின்றது
வண்ண வண்ண மத்தாப்பு...
திரியில் தீ வைத்ததும்
வெடித்து சிதறுகிறது பட்டாசு...
எரிந்து தீர்ந்ததும் கரியான
கம்பிகள் கதறுகிறது...திரியில் தீ வைத்ததும்
வெடித்து சிதறுகிறது பட்டாசு...
எரிந்து தீர்ந்ததும் கரியான
வெடித்து சிதறிய ஒவ்வொரு
காகிதமும் குமுறுகிறது...
ஒவ்வொரு பட்டாசிலும் யாரும்
அறி்யாமல் ஒளிந்திருக்கிறது...
கல்வி மறுக்கப்பட்ட ஏழ்மை
குழந்தை தொழிலாளிகளின் சோகம்...
கந்தக வேதிப் பொருளோடு
சொந்தமாகிய சிறார்கள்...
கைகளில் காய்ப்பெடுத்தும்
உடலிலே காயம்பட்டும்...
பற்ற வைத்த பட்டாசில்
ஏதோவொன்று வெடிக்கவில்லையா...
ஒரு குழந்தை தொழிலாளியின்
கண்ணீர் அதற்கு காரணமாயிருக்கலாம்...
உற்று நோக்குங்கள் ஒர் நிமிடம்
உண்மை உணருங்கள் அக்கணம்...

No comments:
Post a Comment