Thursday, September 15, 2011

நேர்த்தி கடன்..

ஐயனும் ஆத்தாளும் 
ஆசை ஆசையா வளர்த்தாங்க 
வளத்தியான ஆட்டுகிடா.... 

அய்யனார் 
கோவில் திருவிழாவுக்கு 
பலியானது - நேர்ந்துகிட்டாங்கலாம்... 

ஐயனும் ஆத்தாளும்
பொத்தி பொத்தி 
வளர்த்தாங்க சேவலொன்னை..

பொசுக்கென ஒரு நாள்
முனீஸ்வரனுக்கு 
வெட்டப்பட்டது- நேர்ந்துகிட்டாங்கலாம்... 

கண்ணே மணியே முத்தே
என சீராட்டி என்னையும் 
தான் வளர்த்தாங்க...

கல்யாணம் செய்றோம்னு
குடிகார மனுஷனுக்கு 
கட்டி வெச்சாங்க- நேர்ந்துகிட்டாங்களோ....

No comments:

Post a Comment