வாசிப்பு!!
வாசித்த பக்கங்களை
புரட்டிப் பார்த்தேன்..
ஒட்டி இருந்த வாசத்தை
உணர்ந்து கசிந்தேன்..
இறந்த காலம்
இறப்பில்லாதது...
நினைவு திரையரங்கில்
நிறுத்தப்படாத படமாய் ஓடும்...
அடிக்கடி வாசிக்கும்
கவிதையாய் இறந்தகாலம்...
ஒவ்வொரு வாசிப்பின்
முடிவிலும் சில துளி
கண்ணீர் கைதட்டலாய்...
No comments:
Post a Comment