பகிர்வு..
இரவின் அமைதியில் செவிகளை
தீட்டுங்கள்...
எங்கோ ஓர் விசும்பல்
கேட்கும்...
ஒவ்வோர் தலையணையையும்
சோதியுங்கள்...
ஒரு மூட்டை சோகம்
ஒளிந்திருக்கும்...
எதற்கும் காலை எழுந்தவுடன்
மங்கிய நிலவை உற்று பாருங்கள்...
பகிர்ந்த சோகத்தின் சுவடு
ஒட்டியிருக்கும்...
No comments:
Post a Comment