Monday, August 27, 2012

பாத்திரம் அறிந்து...




பசிக்கிறது என கையேந்திய
பிச்சைகாரனை பார்த்ததும்
சட்டை பாக்கெட்டை
தொட்டு பார்த்தேன்...
சிரித்தது இருந்த 
ஒரே ஒரு ஒற்றை
பத்து ரூபாய் தாள்...
சில கிலோ மீட்டர்
தூரம் தானே
நடந்து செல்லலாமே
பசித்த வயிறு
பசியாறட்டுமென இருந்த
பத்து ரூபாயை பிச்சைகாரனிடம்
தந்து சந்தோஷத்துடன்
நடந்தேன்..
கால் வலிக்க
சிறிது தூரம் நடந்து
சென்றதும் என்னை கடந்த
பேருந்தை பார்த்து
திடுக்கிட்டேன்...
ஜன்னலோர இருக்கையில்
அந்த பிச்சைகாரன் என்னை
பார்த்து சிரித்தபடி
பயணிக்கிறான்...

No comments:

Post a Comment