மெளனம் என்ற
நகரில் மோகனம் எதற்கு...
காற்றின் முகவரி
உன் கையடக்கம்...
வானின் எல்லை
நீ அடையும் இலக்கு...
கிரகணங்களை குடி
பெளர்ணமி உமிழ்...
பூ மென்மை தான்
பலரின் பார்வையில்..
அதன் மகரந்தமே கோடி
விருட்சத்தின் காரணம்...
கலங்காதே எக்கணமும்
தெளிந்த நீரோடையாயிரு...
காட்டாறு வந்தாலும் கைகட்டு
நீ கரையாத மலைசிகரம்...
ஆணாதிக்க சூறாவளியா
மிரளாதே முன்னே அடியெடு...
நீ மெல்லிய நாணல்
வளைத்தாலும் ஒடியாமல் நிமிர்வாய்...
சோதனைகள் கூப்பிடு
சவால்கள் தானே சமாளி..
உன் திறமைகளுக்கு
கைவிலங்கிடும் சமூகம்...
எதிர்த்து பார் ஒரு முறை
கைவிலங்கு தெரிக்கும்...
படிதாண்டு உலகத்தை
படித்து அறிவதற்கு...
நேரத்திற்கு கடிவாளமிடாதே
காட்டு குதிரையாய் ஓடவிடு...
அதற்கு முன் நீ
காற்றை போல ஓடு...
கூண்டுக்குள் இருக்கும் வரை
பெண்குயிலே உனக்கு சிறை...
கதவுகளே திற
உன் நம்பிக்கையே சாவி...
உலகத்தை சிறைபடுத்து
உன் திறமையை வெளிச்சமாக்கு...
உறக்க கூவிடு ஓர் முறை
மெளனம் தகர்ந்திடவே..
காற்றுக்கு சிறையில்லை
கடலுக்கு உறக்கமில்லை...
காற்றாய் கடலாய் நீ
புறப்படு எழுச்சி மலராய்...
நகரில் மோகனம் எதற்கு...
காற்றின் முகவரி
உன் கையடக்கம்...
வானின் எல்லை
நீ அடையும் இலக்கு...
கிரகணங்களை குடி
பெளர்ணமி உமிழ்...
பூ மென்மை தான்
பலரின் பார்வையில்..
அதன் மகரந்தமே கோடி
விருட்சத்தின் காரணம்...
கலங்காதே எக்கணமும்
தெளிந்த நீரோடையாயிரு...
காட்டாறு வந்தாலும் கைகட்டு
நீ கரையாத மலைசிகரம்...
ஆணாதிக்க சூறாவளியா
மிரளாதே முன்னே அடியெடு...
நீ மெல்லிய நாணல்
வளைத்தாலும் ஒடியாமல் நிமிர்வாய்...
சோதனைகள் கூப்பிடு
சவால்கள் தானே சமாளி..
உன் திறமைகளுக்கு
கைவிலங்கிடும் சமூகம்...
எதிர்த்து பார் ஒரு முறை
கைவிலங்கு தெரிக்கும்...
படிதாண்டு உலகத்தை
படித்து அறிவதற்கு...
நேரத்திற்கு கடிவாளமிடாதே
காட்டு குதிரையாய் ஓடவிடு...
அதற்கு முன் நீ
காற்றை போல ஓடு...
கூண்டுக்குள் இருக்கும் வரை
பெண்குயிலே உனக்கு சிறை...
கதவுகளே திற
உன் நம்பிக்கையே சாவி...
உலகத்தை சிறைபடுத்து
உன் திறமையை வெளிச்சமாக்கு...
உறக்க கூவிடு ஓர் முறை
மெளனம் தகர்ந்திடவே..
காற்றுக்கு சிறையில்லை
கடலுக்கு உறக்கமில்லை...
காற்றாய் கடலாய் நீ
புறப்படு எழுச்சி மலராய்...

No comments:
Post a Comment