Wednesday, August 31, 2011

நினைவுகள்....



கீரிக் கொண்டிருக்கும்
நிமிஷ நகங்கள்...
எரிச்சல் விரட்டும்
விசிறி்யாய் உன் நினைவுகள்... 
நினைவெனும் காளான் குடையடியில்
சிற்றெரும்பாய் நான்...
கண்ணீர் மழையினூடே நான்
ஒதுங்க இடம் தந்து... 
நினைவெனும் தெருநாய்கள்
என்னை துரத்துகின்றன...
தானாய் வலிய அதனிடம்
கடிபட ஆனந்தபடுகிறேன். . 

No comments:

Post a Comment