Thursday, October 27, 2011

வரம் கிடைக்காதா.....


கொடுத்து விட்டதை
எடுத்து கொள்ள
நானும் பல முறை
முயல்கிறேன்...
ஒவ்வோர் முயற்சிக்கு

பின்னும் என்னில் இருப்பதில்
இன்னும் சிலவற்றை
கொடுத்தே திரும்புகிறேன்...
வள்ளல் பரம்பரையின்
கடைசி வாரிசா நான்
கடைசி வரை
கொடுத்து கொண்டேயிருக்க...
எடுத்துக் கொள்ள
எனக்கு ஓர்
வரம் கிடைக்காதா
உன்னை எனக்கென்று...

No comments:

Post a Comment